• Apr 20 2024

இப்போது இல்லாவிட்டால் எப்போ?- முதல் முறையாக மூக்குத்தி அணிந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில்  5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானவர் தான் கனிகா.இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்துடன் இணைந்து வரலாறு என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இன்னிசை அளபடையே.. என்னும் பாடலுக்கு சூப்பராக நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தார்.


இதனைத் தொடர்ந்து ஆட்டோ கிராப், எதிரி போன்ற படங்டங்களில் நடித்திருக்கின்றார். இது தவிர அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியிருந்தார். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.


 கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார்.தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர்.


இந்நிலையில் தற்போது நடிகை கனிகா முதல் முறையாக மூக்குத்தி அணிந்துள்ளதாக கூறி மூக்குத்தி அணிந்துள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்போது இல்லாவிட்டால் எப்போ? என கூறி, பல மாத தயக்கத்துக்கு பின்னர் மூக்குத்தி அணிந்துள்ளதாக நடிகை கனிகா பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement