• Apr 19 2024

முருகன் மாமாவுக்கு தெரிஞ்சா கார்த்தியின் நிலைமை என்ன ஆகுறது?- உண்மையை சொல்லப் போகும் சுந்தரி

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. திருமண வாழ்க்கை சரியாக அமையா விட்டாலும் தன்னுடைய படிப்பிற்காக தன்னம்பிக்கையுடன் போராடும் பெண்ணைப் பற்றியே இந்த சீரியல் எடுத்துக்காட்டுகின்றது. இதில் கதாநாயகியாக கேப்ரியல்லா நடித்து வருகின்றார்.

இதில் சுந்தரியை விட்டுட்டு அனு என்ற ஒரு பெண்ணை கார்த்திக் திருமணம் செய்திருக்கும் விடயம் கர்த்திக்கின் அம்மா மற்றும் அப்பாவுக்கு தெரிந்து விட்டது. அத்தோடு இதனைத் தாங்க முடியாத கார்த்திக்கின் அப்பா மாரடைப்பால் இறந்தும் விட்டார்.


இதனால் கார்த்திக்கின் அப்பாவின் இறுதிச் சடங்கு முழுவதையும் சுந்தரியே நிறைவேற்றி வைத்தாள். அத்தோடு கார்த்திக்கின் அம்மா கார்த்திக் மீது செம கோபத்தில் இருப்பதோடு கார்த்திக்கை கண்டாலே திட்டி வருகின்றார்.

இப்படியான நிலையில் கார்த்திக் தனது அப்பாவுக்கு காரியம் செய்து விட்டு வருவதைப் பார்த்த அவரது அம்மா கார்த்திக் மீது கோபப்படுவதைப் பார்த்த சுந்தரியின் மாம எதற்காக இவங்க இப்படி கோபப்படுறாங்க என சந்தேகப்படுகின்றார்.இப்படியான நிலையில் சுந்தரி உண்மைகளை தனது மாமாவிடம் சொல்லி விடலாம் என்று யோசிக்கின்றார்.

இதனால் அடுத்து சுந்தரி கார்த்திக் பற்றிய ரகசியத்தை எல்லோரிடமும் கூறுவாரா? அல்லது மறைத்து விடுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement