• Apr 25 2024

எனக்கு பிடிக்கல என்றால் அந்த சீனையே வெட்டிடுவேன்- கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறிய உதயநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்து வரும் திரைப்படம் தான் கலகத் தலைவன். இப்படத்தில் இவருடன் ஆரவ், கலையரசன், நிதி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.இப்படம் வருகின்ற 18ம் திகதி வெளியாகவுள்ளதால் ப்ரமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் ஓர் பேட்டியளித்துள்ளார்.அதாவது உதயநிதியும் ஆரவ்வும்  படத்தின் இறுதியில்தான் 10 நிமிடங்கள் தான் ஒன்றாக வரக் கூடிய காட்சிகள் இருக்கிறதாம். உதயநிதி வரும் காட்சிகளில் கலையரசன்தான் நடித்துள்ளாராம்.


மேலும் இது தவிர ஓகே ஓகே படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று கேட்டபோது சந்தானம் தனது உடல் மொழியெல்லாம் மாற்றி கதாநாயகனாகிவிட்டார். ஹன்சிகாவிற்கு திருமணமாகப் போகிறது. அதனால் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். 

மேலும் நான் தயாரித்த ஆதவன் திரைப்படத்தில் கிளைமாக்சிற்கு பின்னர் வரும் காட்சியில் என்னை சிறப்பு தோற்றத்தில் நடிக்கச் சொன்னார் கே.எஸ்.ரவிக்குமார். அந்தக் காட்சியில் நடித்தவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவர்களுடன் நடிக்கும்போது கூச்சமாக இருந்தது. 


இருப்பினும் நான் சுமாராக நடித்ததை பார்த்து அவர்கள் கைதட்டினார்கள். ஆனால் முன்னதாகவே ரவிக்குமாரிடம், அந்தக் காட்சி சரியாக இல்லையென்றால் நானே எடிட் செய்து விடுவேன் என்று கூறித்தான் நடித்துன் என்றும் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement