• Apr 20 2024

"நான் செத்தால் இவங்க தான் காரணம்".. லெட்டர் மூலம் பகீர் கிளப்பிய பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் அடிக்கடி பகீர் கிளப்பும் வகையில் பல கருத்துக்களை பதிவிட்டு வருவது வழக்கம்.


அந்தவகையில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை கிளப்பியதும் இதே பாயல் கோஷ் தான். ஆனால், அவர் பழி சொல்லும் நேரத்தில் தான் இலங்கையில் ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததாக அனுராக் காஷ்யப் மறுப்பு தெரிவித்து இருந்தார்.


இந்நிலையில் தற்போது திடீரென நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஷாக்கிங் லெட்டரை பதிவிட்டு திரையுலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். அதாவது "நான் தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டாலோ அதற்கு இவங்க தான் காரணம்" என யார் பெயரையும் குறிப்பிடாமல் யாரையோ எச்சரிக்கும் விதமாக ஒரு கடிதத்தை எழுதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பதறியடித்து உடனடியாக மருத்துவரையோ, அல்லது உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள் எல்லாம் சரியாகி விடும் என ஆறுதல் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாது இவருக்கு விஷமிகள் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனரா? அல்லது எந்த பிரபலத்தை குறிப்பிட்டு இப்படியொரு குற்றச்சாட்டை போட்டு உள்ளார்? எனப் பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement