• Apr 24 2024

நடிக்க வரலைனா இந்த தொழில் தான் செய்திருப்பேன்: ரசிகர் கேட்ட கேள்விக்கு பளார் என பதிலளித்த நிதிஅகர்வால்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் நிதி அகர்வால்.இவர் தமிழில் ஈஸ்வரன் என்னும் திரைப்படத்தின் சிம்புக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.



தற்போது சென்னையில் இருக்கும் அவர் நேரலையில் ரசிகர்கள் உடன் உரையாடினார். அதாவது தான் ஒர்கவுட் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும், மேலும் தான் யோகாவில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும்  தெரிவித்து இருக்கிறார்.



அதன்போது அவரிடம் 'நீங்க நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீங்க' என கேட்டார். அதற்க்கு பதில் சொன்ன அவர் "நான் நடிப்பில் ஜெயிக்கவில்லை என்றால் வீட்டில் விட்டிருக்க மாட்டார்கள். சம்பாதிக்க எதாவது வேலைக்கு போ என்று தான் சொல்லி இருப்பார்கள்."  



"நான் நடிகை ஆகவில்லை என்றால் பேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன். அத்தோடு பேஷன் டிசைனிங் படித்துவிட்டு அதை செய்திருப்பேன். என் குடும்பம் பிஸ்னஸ் பின்னணி கொண்டது. அந்த அறிவை கண்டிப்பாக தொழிலில் பயன்படுத்தி இருப்பேன்" என நிதி அகர்வால் தெரிவித்து இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement