விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி 20 நாட்களுக்கு மேல் கடந்து விறுவிறுப்பாக கடந்து செல்கின்றது.இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி இருந்தது.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து திடீரென வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறுஇருக்கையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் சீரியல் நடிகை ரச்சிதா சமைத்துக் கொண்டு இருந்தபோது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சென்று உணவு கேட்க, அப்போது ரச்சிதா, உங்களுக்கு பசிக்கிறது என்றால் கஞ்சி குடியுங்கள் என்று கூற... உடனே ராபர்ட் மாஸ்டர் தனக்கு கஞ்சிதான் போல என நினைத்து கோவித்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதன் பின்னர் அவரை அழைத்துவந்த ஷெரினா கிச்சனில் இருந்து சிவின் மற்றும் ரச்சிதா முன்னிலையில், வைத்து விசாரிக்கும் போது முழு உண்மையும் தெரியவந்தது.
அதன் பின்னர் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவை சாப்பிட சொல்ல, ரச்சிதா மாட்டேன் என்பதாக தலையை ஆட்டி கண்கலங்குகிறார். அப்போது ஷெரினா, முதலில் நீங்கள் சாப்பிடுங்க மாஸ்டர், ஸ்கூல் பையன் மாதிரி அடம் பிடிக்காதீங்க என்று சொன்னார். இதேபோல், சிவினும், ரச்சிதா எந்த உள்நோக்கமும் இன்றி சாதாரணமாகவே கஞ்சி சாப்பிட சொன்னார் என கூறி ராபர்ட்டை சமாதான படுத்தினார். அத்தோடு இவர்களின் சண்டையையும் அதை பிற ஹவுஸ்மேட்ஸ் சமாதானம் செய்துவைத்ததும் க்யூட்டாக இருந்ததாக ட்விட்டரில் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
Listen News!