தமிழ் சினிமாவில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறியப்பட்டவர் தான் நடிகை ராதிகா ஆப்தே. இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.
பாலிவூட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது கருத்துக்களையும் வெளிப்படையாகப் பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் அண்மையில் படங்கள் குறித்து ராதிகா கூறியதாவது,வருண் தவானின் பத்லாபூர் படத்தில் ஆடையை அவிழ்த்த காட்சியில் நடித்த பிறகு நிறைய செக்ஸ் காமெடி பட வாய்ப்புகள் என்னை தேடி வருகிறது. நான் செக்ஸ் காமெடிக்கு எதிரானவள் அல்ல. ஆனால் நான் செக்ஸ் காமெடி படங்களில் நடிக்க மாட்டேன்.
அது பெண்களை காயப்படுத்துவது போன்று உள்ளது. பெண்களை செக்ஸ் பொருளாக பார்க்கும் படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லை. ஸ்க்ரிப்ட்டை பொறுத்து தான் படத்தை தேர்வு செய்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் இவர் அண்மையில் ஹிந்தியில் வெளியான விக்ரம் வேதா படத்தில் சயிஃப் அலி கானின் வழக்கறிஞர் மனைவியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது என்பதும் முக்கியமாகும்.
Listen News!