• Apr 25 2024

சொந்த ஊரில் டீ கடை வைத்து பிழைப்பேன்…அதிரடி முடிவு எடுத்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.இவர் ஒரு நடிகர் மாத்திரமல்லாது இயக்குநராகவும் பட்டையை கிளப்பி வருகின்றார்.மேலும் இவர் எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் ஏற்று நடிக்கும் இயல்பு கொண்டவராவார்.

இவருடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வாலி மற்றும் குஷி ஆகிய படங்கள் ஆரம்பத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து அன்பே ஆருயிரே,மகாநடிகன்,கள்வனின் காதலி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். இருப்பினும் அவ்வளவு வெற்றி வாய்ப்பினை வழங்கவில்லை. இதனால் சில வருடங்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சூர்யா மீண்டும் வில்லனாக நடிக்கத்தொடங்கினார்.அவருடைய வில்லன் அவதாரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அண்மையில் இவருடைய வில்லன் கதாபாத்திர நடிப்பில் வெளியான மாநாடு,டான் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட ரோலாக விளங்குகின்றது.

அந்தவகையில்,கடந்த 8 வருடங்கள் முன்னாடி குறிப்பாக 2014 ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நிகழ்ந்தது.எஸ்.ஜே.சூர்யா இயக்குநராக இருந்த நேரத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் நாம் இணைந்து படம் பண்ணலாம் என கூறி சூர்யாவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கவனம் செலுத்தி வந்ததால் இனி படங்களை இயக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனால் அந்த தயாரிப்பாளரிடம் பணத்தை திருப்பி கொடுக்க எஸ்.ஜே.சூர்யா முன்வந்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் பணத்தை வாங்கமால் நீங்களே வைத்து கொள்ளுங்கள். தேவை என்றால் நான் பிறகு வாங்கி கொள்கின்றேன் என கூறியுள்ளார். இதனால் எஸ்.ஜே.சூர்யாவும் சரி என கூறியுள்ளார்.அதன் பிறகு தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் .மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்த தயாரிப்பாளர் பணத்தை வட்டியுடன் கேட்கிறார்.இதனால் எஸ்.ஜே.சூர்யா ஒரு கோடிக்கு மேல் ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என கறாராக சொல்லிவிட்டாராம்.

ஆனால் தற்போது ஸ்.ஜே.சூர்யாவுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்காமல் அவரைபடங்களில் நடிக்க விடாமல் செய்வதற்காக ரெட் கார்டு கொடுக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் எஸ் ஜே சூர்யா எதற்கும் அசராமல் எனக்கு நடிப்பே வேண்டாம் நான் சொந்த ஊரில் டீ கடை வைத்து பிழைத்துக்கொள்வேன், உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என சவால் விட்டுள்ளார். ரெட் கார்டு கொடுக்க முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement