• Apr 20 2024

பாரதிராஜாவுக்கு திருமணம் செய்தே தீருவேன்...அடம் பிடிக்கும் பிரபலம்..யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் பாரதிராஜா. தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருந்த இவரின் இயக்கத்தில் வெளியான நாயகிகள் பலரும் 90களில் முன்னணி கதாநாயகிகளாக ஆகியுள்ளார். ராதா, ராதிகா, ரேவதி என தமிழ் திரை உலகிற்கு நடிப்பில் சிறந்த ஆக்ட்ரஸை கொடுத்த பெருமை இவரையே சாரும். அத்தோடு  மண்வாசனை மணக்கும் கிராமத்து கதைகளை இயக்குவதில் பெயர் போனவர் பாரதிராஜா. இவர் இறுதியாக மீண்டும் மரியாதை என்னும் படத்தை இயக்கி இருந்தார். 

இதையடுத்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த பாரதிராஜா சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுசுக்கு தாத்தாவாக நடித்து அசத்தி இருந்தார். அவரது நடிப்பு படத்தில் வெகுவான பாராட்டுகளை பெற்றிருந்தது.



இந்நிலையில்  பாரதிராஜா அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் அவர் மதுரையில் இருந்து சென்னை திரும்புகையில் ஏர்போர்ட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பாரதிராஜா ஒரு நாள் முழுவதும் மதுரையிலே தங்கி விட்டு மறுநாள் சென்னை திரும்பினார். 



நீலாங்கரையிலுள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர். மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே  மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவை இளையராஜா, வைரமுத்து, ராதிகா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி வந்தனர்.



அதேபோல சமீபத்தில் பாரதிராஜாவை நேரில் சந்தித்த தனுஷ் மருத்துவ செலவை முழுதுமாக ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார்.ஆனால் முன்னதாகவே ஏ.சி.சண்முகம் என்பவர் முழு செலவையும் ஏற்றுக்கொண்டுவிட்டார் என மருத்துவமனை தரப்பில் குறிப்பிடப்பட்டது.


இந்நிலையில் பாரதிராஜாவிடம் இளையராஜா சுவாரசியமாக பேசி இருந்த ஆடியோ கிளிப் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மருத்துவமனையில் இருந்த பாரதிராஜாவை சந்தித்த இளையராஜா தான் வெளியூர் சென்று விட்டு திரும்புகிறேன் என அவசரமாக கிளம்பியுள்ளார்.


இதன் பின்னர் காரில் இருந்தபடி வாட்ஸாப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும் அதில்,  நீ சீக்கிரம் வந்துருவ இந்த திருக்கடையூர் ஸ்ரீதர் என்று ஒருவர் உனக்கு 80 வது கல்யாணம் பண்ணனும் என்று  ரொம்ப ஆர்வமா இருக்காரு  நான் ஊருக்கு போயிட்டு வந்ததும் அதை சிறப்பாக பண்ணிடுவோம் என்று தெரிவித்துள்ளார். தனது தோழனின் உற்சாகமான வார்த்தையை கேட்ட பாரதிராஜா புது தெம்பு அடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement