• Apr 19 2024

கவர்ச்சிப் பெண்ணுக்கு நம்பர் கொடுத்தது நான் தான்; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து !

Jo / 1 year ago

Advertisement

Listen News!

புகழ்பெற்ற தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் மாரிமுத்து. இவர் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் இளம் பெண் ஒருவர் கவர்ச்சி புகைப்படம் பதிவிட்டு can i call you என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் மாரிமுத்துவின் பெயருடன் கூடிய டுவிட்டர் கணக்கு ஒன்றில் இருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.அது அவரது நம்பர் என்பது பலருக்கும் உறுதியானதால் தான் இந்த டுவிட் வைரல் ஆனது.இதற்கு மாரிமுத்துவின் மகன் அகிலன் டுவிட்டரில் யாரோ அதனை தவறாக பயன்படுத்தியிருக்கின்றனர்.என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இது தொடர்பாக சேனல் பேட்டி ஒன்றில் கேட்க்கபட் ட கேள்விகளுக்கு  மாரிமுத்து விளக்கம் அளித்துள்ளார். 

கேள்வி ;-நீங்க தான் அந்த ட்வீட் போட்டிங்களா?

பதில்;-ஆமா ,நான் தான் போட்டன்.ஒரு பொண்ணு உங்ககூட பேசலாமா எண்டு கேக்குது,நானும் ஆமா பேசலாம்னு நம்பர் குடுக்கிறதில என்ன தப்பு?நான் எதுக்கும் பயப்பிட மாட்டன்,யார் நம்பர் கேட்டாலும் குடுத்திடுவன்.எனக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் கால்ஸ் வரும்.எத்தின நாளைக்கு இப்படி பண்ணிட்டு இருக்க போறாங்க.நேற்று கால் ஒன்னும் வரல இப்படியே குறிஞ்சிட்டு.உலகம் முழுவதும் என்ர நம்பர் இருக்கிறது எனக்கு நல்லம் தானே.

கேள்வி[-உங்க சைட்ல வந்து உங்க மகன் இது அப்பா போடல என்று ட்வீட் பண்ணியிருக்காரு இத பற்றி என்ன சொல்லுறீங்க ?

பதில்;-என் பையன் அப்பா அப்படி போடல அவருடைய நம்பர் பெரும்பாலானோர் கையில இருக்கு அதை பயன்படுத்தி யாராவது மிஸ் யூஸ் பண்ணி இருக்கலாம் அப்படின்னு போட்டு இருக்கான்.அதாவது ஒரு மகனாக தன் தந்தைக்கு ஒரு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது அப்படி என்ற நல்ல எண்ணத்தில் அவன் போட்ட ஒரு விஷயம்.

கேள்வி;-நீங்க அவங்களுக்கு பர்சனலா நம்பர் அனுப்பி இருக்கலாம் தானே ஏன் பப்ளிக்கா நம்பர் போட்டிங்க?

பதில்;-நான் யாருக்கும் பயந்தவன் இல்லை.பயந்தவன் நான் எப்படி போடுவான்.நான் ஏன் அப்படி போடணும்.இதான் என்ர நம்பர் இத எத்தின பேருக்கு கொடுக்கோணுமோ கொடுங்க.என்ன மதிச்சு போன் பண்றவங்கன்னா ஹலோ மாரிமுத்து சாரா  என்று சொல்லி கதைக்கணும். ஏன் கால  கட் பண்றான். முட்டாள்களுக்கு ஏன் நான் பதில் சொல்லோணும்.என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement