• Apr 25 2024

விக்னேஷ் சிவன் & நயன்தாரா காதல் ஏற்பட்டதற்கு நான் தான் முக்கிய காரணம்- நீண்ட நாள் ரகசியத்தை சொன்ன மிர்ச்சி சிவா

stella / 1 year ago

Advertisement

Listen News!


அகில உலக சூப்பர்ஸ்டார் என  ரசிகர்களால் அன்போடு குறிப்பிடும்,நடிகர் தான் மிர்ச்சி சிவா. எப்போதும் காமெடித்திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது சீரியஸான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இவரது நடிப்பில் அடுத்ததாக "சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் சிவாவுடன் அஞ்சு குரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன், மாகாபா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்னேஷ் ஷா இயக்கி உள்ளார். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள சூழலில், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், லார்ட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளது.


சமீபத்தில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. ஸ்மார்ட் போன் ஒன்றைக் கொண்டு சிவா சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை காமெடியாக இந்த படம் எடுத்துரைப்பதும் ட்ரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

மேலும், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம், பிப்ரவரி 24 ஆம் தேதியன்று வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை சிவா & மேகா ஆகாஷ் அளித்துள்ளனர். அப்போது பேசிய நடிகர் சிவா, விக்னேஷ் சிவன் & நயன்தாரா குறித்தும் பேசினார்.அவர் பேசியதாவது, "ஒருவேளை நான் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருந்தால் நயன்தாரா அந்த படத்தில் நடித்து இருப்பாங்களானு தெரியாது. நயன்தாரா நடிக்கவில்லை என்றால் விக்னேஷ் சிவன் & நயன்தாரா காதல் ஏற்பட்டு இருக்குமா?. அவங்க காதலுக்கு ஒரு வகையில் நானும் ஒரு காரணம். அதற்கு அவங்க இரண்டு பேரும் எனக்கு நன்றி சொல்லனும். " என சிவா ஜாலியாக பேசினார்.



Advertisement

Advertisement

Advertisement