• Apr 20 2024

இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என்று நினைக்கிறேன்- பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷெரினா அளித்த பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது கடந்த மாதம் 90ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது சூப்பராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. தொத்தமாக 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தனர். தற்பொழுது 4 பேர் இந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் வீட்டை விட்டு இறுதியாக ஷெரினா வெளியேறியிருந்தார். இவர் தற்பொழுது பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டியில் பேசிய விடயங்கள் வைரலாகி வருகின்றது. அதாவது நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போது எனக்கு தேரவு தெரிவித்த மக்கள் எல்லோருக்கும் நன்றி.


நீங்க வாக்களிக்கல என்றால் அந்த வீட்டுக்குள்ள 4 வாரம் என்னால இருந்திருக்க முடியாது உங்கள் அன்புக்கு நன்றி. மேலும் நான் நாமினேஷனில் வந்தபோதே தெரியும் நான் தான் வெளிய போவன் என்று ஏவென்றால் ஆயிஷா அசீம் எல்லாரும் மீடியா பீல்ட்ல இருக்கிறாங்க அதனால அவங்க யாரும் வெளில போக மாட்டாங்க என்று தெரியும்.

அதே மாதிரி இந்த 4 வாரமும் யாருடைய சர்ப்போட்டும் இல்லாம எப்படி தனியா வாழுறது என்ற விஷயத்தை நிறைய கற்றுக் கொண்டேன. அதே மாதிரி எல்ல வேலையும் செய்யப்பழகிட்டேன். இது எனக்கொரு நல்ல அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த வீட்டில எனக்கு ஆயிஷாவும் கதிரவனும் நல்ல நண்பர்கள். இந்த நிகழ்ச்சின் லாஸ்ட் வரைக்கும் ஷிவின் அசீம் ஆயிஷா விக்ரம் ஆகியோர் போவாங்க என்று நினைக்கின்றேன். இவங்க கடுமையான போட்டியாளர்கள் என்றும் தெரிவித்தார். இது தவிர ஒவ்வொரு ஹவுஸ்மேட்டைப் பற்றியும் ஒற்றை வார்த்தையில் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement