• Apr 26 2024

நான் மெசேஜ் பண்ணினேன் அவங்க தான் ரிப்ளே பண்ணல வெளில வரட்டும் பார்ப்போம்- மனம் திறந்த ரச்சிதாவின் கணவர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட ராஜா ராணி டாஸ்க் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளதோடு அசீம் ,ரச்சிதா ,கதிரவன் ஆகியோர் ரகசிய டாஸ்க் ஒன்றினை செய்ததையும் அனைத்துப் போட்டியாளர்கள் அறிந்து கொண்டனர். அத்தோடு இந்த டாஸ்கினைப் பார்க்கும் போது படம் பார்த்த மாதிரி இருக்கு என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் ரச்சிதா.இவர் இதுவரை தனது விளையாட்டை ஒழுங்காக விளையாடி வருகின்றார்.இது ஒரு புறம் இருக்க ராபர்ட் மாஸ்டருடன் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி வருகின்றார்.


மேலும் ரச்சிதா பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த போது சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கும் ரச்சிதாவுக்குமான பிரச்சனை குறித்தும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பேசியுள்ளார் அவரது கணவர் தினேஷ். அதில், ரச்சிதா குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. அவற்றையெல்லாம் நான் நம்ப மாட்டேன் என கூறியுள்ளார்.


மேலும் ரச்சிதாவுக்கும் தனக்கும் இருப்பது சிறிய கருத்து வேறுபாடுதான் அது விரைவில் சரியாகும் என தெரிவித்துள்ளார். ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்று தெரிந்ததுமே அவருக்கு வாழ்த்து தெரிவித்து மெஸேஜ் செய்ததாகவும் ஆனால் மெஸேஜை பார்த்துள்ள ரச்சிதா தனக்கு ரிப்ளை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் ரச்சிதா வெளியே வந்ததும் இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசி பிரச்சனையை தீர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் தினேஷ். ரச்சிதா ராபர்ட் மாஸ்டரிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் இருப்பது, பிரச்சனை வேண்டாம் என்பதற்காகதான் என்றும் கூறியுள்ளார். ரச்சிதா குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்


Advertisement

Advertisement

Advertisement