• Apr 19 2024

மூன்று பெக் அடித்தேன், போதை ஏறவே இல்லை- கமல் நடிப்பை பார்த்து வியந்து போன ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு பெரும் நட்சத்திரங்களாக விளங்கும் நடிகர்கள் தான் ரஜினி மற்றும் கமல். ரஜினி வயதில் மூத்தவர் என்றாலும் திரைப்படத் துறையை பொறுத்தவரை கமல்தான் சீனியர். அதனால், கமல் எனது கலை உலக அண்ணா என்று வெளிப்படையாகவே பாராட்டியிருக்கிறார் ரஜினி.

அந்த வகையில் ரஜினி தற்பொழுது ஜெயிலர் என்னும் படத்திலும் கமல்  இந்தியன் 2 என்னும் படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் பொதுவாக படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் புதிதாக வெளிவரும் நல்ல படங்களை பார்த்து அதன் இயக்குநர் மற்றும் நடிகர்களை நேரில் அழைத்து வாழ்த்துவார் ரஜினி. 

அப்படி சில சமயம் நல்ல படங்கள் வராத சூழ்நிலையில் சில பழைய படங்களை மீண்டும் மீண்டும் விரும்பி பார்ப்பாராம். அப்படி தான் அடிக்கடி விரும்பி பார்ப்பது திருவிளையாடல் மற்றும் ஹேராம் திரைப்படங்கள்தானாம். ஹேராம் திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதில் ஒரு புதிய விசயம் தனக்கு தென்பட்டதாகவும் ரஜினி ஒரு நிகழ்வில் பேசியிருப்பார்.


நாயகன் வெளியான அதே நாளில்தான் மனிதன் திரைப்படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களில் எது வசூல் அதிகம் என்ற பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், இன்றுவரை பேசக் கூடிய படமாக நாயகன் இருக்கிறது. ஒருமுறை இயக்குநர் பி.வாசு ரஜினியிடம் பேசும் பொழுது, நாயகன் படம் போல் நீங்கள் இதுவரை ஒரு படம் நடிக்கவே இல்லை என்று பி.வாசு கூறினாராம்.

 அதற்கு ரஜினி, உங்களுக்கு ஒன்று தெரியுமா அந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து மூன்று பெக் அடித்தேன், போதை ஏறவே இல்லை. உடனே கமலுக்கு ஃபோன் போட்டு,"கமல் மூன்று பெக்கை விட வேலு நாயக்கர் போதை அதிகமா இருக்கு" என்று தான் பாராட்டியதாக ரஜினி கூறினாராம்.இவரின் இந்த பதிவு வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement