• Apr 16 2024

குடும்ப வாழ்க்கையை கணவருடன் என்ஜாய் பண்ணி வாழுறேன்- மீனாவின் வைரலாகும் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் மீண்டும் அண்ணாத்த திரைப்படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்திருந்தார்.

இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல தொழிலதிபராகிய வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. நைனிகா தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார்.

இந்த நிலையில் நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக இறப்புக்குள்ளார். இதனால் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீனா பழைய பேட்டி ஒன்றில் பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது எங்க வீட்டில நான் ஒரு பொண்ணு அதனால நான் எடுக்கிறது தான் பைனல் முடிவாக இருக்கும் கல்யாணத்துக்குப் பிறகு தான் குடும்ப நிர்வாகத்தில கணவன் மனைவி இரண்டு பேருமே ஒருமித்த முடிவு எடுக்கனும் என்று தெரிஞ்சுக்கிட்டேன். அதனால் ஆரம்பத்தில எனக்கும் எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு வந்ததுண்டு. அப்பவும் வரும். ஆனால் விஷயத்தை பொறுத்தது. டிஸ்கஸ் பண்ணி விட்டுக் கொடுத்து போற அழகான பண்பும் நமக்குள்ள இருக்கு. அதனால அவர் அவர் வேலையில முழுமையாக கவனத்தை செலுத்தக் கூடியதாக இருக்கு. இன்ஜுனியரான என் கணவர் பெங்ளுர்லையும் சென்னையிலும் வேர்க் பண்றாரு. அதனால் இரண்டு ஊருக்கும் ராவல் பண்ணிட்டு என்னோட ஆக்டிவ் வேலையை பார்த்திட்டு இருக்கிறேன். குடும்ப வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணுறேன் என்னும் தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேட்டியை ரசிகர்கள் வைரலாக்கி தமது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement