• Apr 20 2024

"சிவகார்த்திகேயனை யார் என்றே தெரியாது"…மிஸ்கின் கூறிய பதில்…விமர்சிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாகிய விஜய் டீவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவரே நடிகர் சிவகார்த்திகேயன். 'மெரினா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தது மட்டுமில்லாமல் தொடர் வெற்றிகளையும் கொடுத்திருக்கின்றார். யாருமே எதிர்பார்த்து நிற்காத நேரத்தில் மளமளவென வளர்ந்து சினிமாவில் தனது சாதனையை நிலை நாட்டியிருக்கின்றார்.

தனது அறிமுகப் படத்தினைத் தொடர்ந்து தனுஷ் ஹீரோவாக நடித்த '3' படத்தில் இவர் காமெடியனாக நடித்தார். எனினும் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையை திருப்பி போட்ட படம் என்றால் அது தனுஷ் தயாரிப்பில் வெளியான 'எதிர்நீச்சல்' என்ற படம் தான். அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாக மாறத் தொடங்கின. இதற்கு முக்கியமான காரணம் நகைச்சுவை பாணியில் அமைந்த இவரது நடிப்புத் திறனே ஆகும்.

இதேபோன்றே சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியாகி இருந்த 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய படங்களும் மெகாஹிட் வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் நேரடியாக தெலுங்கு சினிமாவிலும் கால் பதிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி 'மாவீரன்' என்ற படத்திலும் இவர் நடித்து வருகின்றார். இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க மிஸ்கின் வில்லனாக நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனை பற்றி மிஸ்கின் பேசிய பேச்சு ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது அந்த நிகழ்ச்சியில் மிஷ்கினிடம் ரஜினி, கமல், அஜித் பற்றிய சில கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில் "ரஜினி என்றால் முள்ளும் மலரும், கமல் என்றால் சிறந்த நடிகர், அஜித் என்றால் சிறந்த மனிதர்" என்று கூறியிருக்கின்றார். அவர்களைத் தொடர்ந்து அந்த வரிசையில் மிஸ்கினிடம் சிவகார்த்திகேயன் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிஸ்கின் 'சிவகார்த்திகேயன் பற்றித் தெரியாது" என பதிலளித்திருந்தார்.

இதனைப் பார்த்த நம்ம சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சும்மா விடுவார்களா?. சிவகார்த்திகேயனை அன்று யார் எனத் தெரியாது என்று கூறிய மிஸ்கின் தற்போது அவரின் படத்தில் நடிக்கவுள்ளார் என பெருமையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இந்த பழைய சம்பவத்தை மனதில் வைத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிஸ்கினை இணையத்தில் விமர்சித்தும் வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement