• Apr 25 2024

எனக்கு ஃப்ரீடம் இல்லை நான் இதிலிருந்து வெளியே போறேன்- அசீம் எடுத்த திடீர் முடிவு-வீட்டில் சலசலப்பு!!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது பேக்டரி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

இதில் மகேஸ்வரி, அசீம், விக்ரமன் உள்ளிட்டோர் ஒரே அணியில் இடம் பிடித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் அசீம் தெரிவித்த விஷயம் தான் பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.


போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அசீமிடம் பேசும் மகேஸ்வரி, "நீங்கள் சொல்வது தான் இந்த வீட்டில் நடக்க வேண்டுமா என்ன?. நீங்கள் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்பது போல் பேசுகிறீர்கள்" என கேட்கிறார்.

மகேஸ்வரியின் பேச்சை கேட்டு கடும் கோபம் அடைந்த அசீம்"நானும் இந்த அணியில் ஒருவன் என்கின்ற போது, நான் சொல்வதை போல தான் அனைவரும் செய்கிறார்கள் என்பது போல நீங்கள் பேசுகிறீர்கள்" என அசீம் கொந்தளிக்கிறார். மறுபக்கம், மகேஸ்வரி தனக்கு தோன்றுவதை தான் அப்படி கருத்தாக வெளிப்படுத்துகிறார் என விக்ரமன் அசீமிடம் கூற முயல, "நீங்க அன்னைக்கும் சார்பா பேசுறீங்க, இன்னைக்கும் மகேஸ்வரிக்கு சார்பா பேசிட்டு இருக்கீங்க" என விக்ரமனிடமும் சற்று கோபமாக அசீம் பேசுகிறார்.


அதே போல, மகேஸ்வரியிடமும் நீங்கள் தனிப்பட்ட காரணத்திற்காக என்னை தாக்கி பேசுகிறீர்கள் என்பதையும் அசின் குறிப்பிட்டுள்ளார். இறுதியில் அசீமை சமாதானப்படுத்த விக்ரமன் முயன்ற போதும் முடியவில்லை. அணியில் இருந்து தான் வெளியேறுவதாகவும் நீங்கள் வேறு ஒரு போட்டியாளரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறும் அசீமிடம் Resignation செய்வதற்கு சரியான காரணத்தை கூற வேண்டும் என்றும் விக்ரமன் விளக்கம் கேட்கிறார்.தனக்கு ஃப்ரீடம் இல்லை என கூறிவிட்டு அசீம் கடந்து செல்ல ஒரே அணியில் ஏற்பட்ட குழப்பங்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement