• Mar 28 2024

அந்த வாய்ப்பு எனக்கு ஒரு முறை கூட கிடைக்கவில்லை- விஸ்வநாத் மறைவுக்கு நடிகை குஷ்பு இரங்கல்..!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் கே.விஸ்வநாத்.இவர் நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும் வலம் வந்து கொண்டிருந்தார்.இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய  திரைப்படங்களாகும்.

நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.


50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். இந்நிலையில் நேற்று வயது முதிர்வின் காரணமாக கே.விஸ்வநாத் காலமானதாக அறிவிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விஸ்வநாத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை குஷ்பு உருக்கமான பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார்.இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,"நாம் மேலும் ஒரு ரத்தினத்தை இழந்துவிட்டோம். அவர் ஒரு லெஜெண்ட். கே.விஸ்வநாத் அவரது கலை மற்றும் திரைப்படங்களை புரிந்துகொள்வது குறித்த அவருடைய ஆர்வத்திற்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு ஒருமுறைகூட எனக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் அவருடைய படைப்புகளின் தீவிர ரசிகை. ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement