பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 6 ஆவது சீசனானது விறுவிறுப்பாகவும், பரபரப்புக்கு பஞ்சமில்லாமலும் நடந்து வருகின்றது.
அத்தோடு ரொமான்ஸிலும் களை கட்டி வருகின்றது. இதில் 21 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில் இருவர் போட்டியிலிருந்து விலகி விட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அசல் கோளாறு. கானாப் பாடகரான இவர் பல்வேறு மேடை கச்சேரிகளில் பங்கேற்று பாடல்களை பாடி வருகிறார். தற்போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இவர் சக பெண் போட்டியாளர்களிடம் எல்லை மீறி நடந்து கொள்கிறார்.
அதுமட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அசல் கோலார் செய்யும் காரியங்களை பார்த்து பார்வையாளர்கள் பலரும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் எப்பொழுது பார்த்தாலும் இவர் பெண் போட்டியாளர்களுடன் தான் அதிகமாக இருக்கிறார்.
எப்போதும் பெண் போட்டியாளர்களை சுற்றி சுற்றி வரும் அசல் கோளாறு, அவர்களின் கைகள், கால்கள், முதுகு, கன்னம் என தெரிந்த இடங்களையெல்லாம் தொட்டுத் தடவுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மேலும் அவர்களின் அருகில் ஒட்டி உரசி அமர்வது, மடியில் படுப்பது என தன்னுடைய ஆசைகளை தீர்த்து வருகிறார் அசல் கோளாறு. அதிலும் குறிப்பாக நேற்று நிவாஷியின் தோள் பட்டை மற்றும் கைகளை பிடித்து கடித்து வைத்தார் அசல் கோளாறு. அதனைத் தொடர்ந்து குயின்ஸியிடமும் அத்துமீறியுள்ளார் அசல் கோளாறு.
இவை யாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்த பிக்பாஸ் ரசிகர்கள் தற்போது இவருக்கு ஒரு பட்டப் பெயரினை முன்வைத்து இருக்கின்றார்கள். அதாவது "தடவியல் நிபுணர் அசல் கோளார்" எனக் கூறி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது "தடவியல் நிபுணர் அசல் கோளாரை இந்த வாரம் வெளியேற்றுங்கள்" எனவும் கூறி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
Listen News!