இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் என்பவர் பிரிட்டன் பிரதமர் ஆகியுள்ளார். இந்த சம்பவம் முதல்முறையாக நடந்ததால்இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சோசியல் மீடியா வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமர் ஆகி உள்ளதை இந்தியர்கள் கொண்டாடினாலும், அந்நாட்டு மக்கள் சிலர் அவர்மீது வெறுப்புடனே உள்ளனர். இது தொடர்பாக டிவி நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், ஒரு கருப்பினத்தவர், அதுவும் வேறு நாட்டுக்காரருக்கு எப்படி நம் நாட்டின் பிரச்சனைகளை புரிந்துகொள்ள முடியும்” என கூறி இருந்தார்.
இந்த வீடியோவை பகிர்ந்திருந்த ‘தி டெய்லி ஷோ’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர், திறமை, கொள்கை ஆகியவற்றை வைத்தே ஒருவரை மதிப்பிட வேண்டுமே தவிர, அவரின் நிறத்தை வைத்து மதிப்பிடக் கூடாது’ என கூறி இருந்தார்.
இந்நிலையில், நடிகர் சியான் விக்ரம், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, “இதைப் பார்த்ததில் இருந்தே என் சிரிப்பை அடக்க முடியவில்லை. மன்னிக்கவும் இதை நான் பகிர வேண்டும் என நினைத்தேன். முதலில் தமிழ் இந்தியன் அமெரிக்காவின் குடியரசு துணைத்தலைவர் ஆனார், இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் முதன்முறையாக பிரிட்டன் பிரதமராகி உள்ளார். வா ராஜா வா..!” என பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்தத்திலிருந்து என் சிரிப்பை அடக்கமுடியில்லை. 😉 Sorry but i have to share it. 🤣 Way to go India. 🇮🇳 First a தமிழ் Indian VP of the US. And now a British PM of Indian descent. வா ராஜா வா!! https://t.co/eGVnnT74OZ
Listen News!