• Apr 19 2024

"25 ஆம் தேதி வரை என்னால் காத்திருக்க முடியவில்லை- ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் மகளாகவும் நடிகர் தனுஷின் மனைவியாகவும் இருப்பவர் தான் ஐஸ்வர்யா. இவர் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கிய இயக்குநராகவும் வலம் வருகின்றார்.


அண்மையில் அதிக வருமான வரி செலுத்துவதற்காக, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநில சார்பில் வழங்கப்பட்ட கௌரவ சான்றிதழை, தமது தந்தை சார்பில் சென்று பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, பெருமையான மகளாக உணர்ந்ததாகவும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.


அந்த வகையில் இவர் தற்பொழுது லால் சலாம் படத்தினை இயக்குவதில் பிஸியாக இருந்து வருகின்றார். இப்படத்தில் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள்.


இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரம் செய்யும் புகைப்படங்களை  வெளியிட்டு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "25 ஆம் தேதி வரை காத்திருக்க முடியவில்லை. இந்த ஆண்டில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் இது" என பதிவிட்டுள்ளார்.





Advertisement

Advertisement

Advertisement