• Apr 23 2024

டாட்டூஸ் கூட என்னால் போட முடியாது எப்படி ஊசி மட்டும் போட முடியும்- ஹார்மோன் ஊசி சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய ஹன்சிகா

stella / 11 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரை உலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக  மாறியவர் ஹன்சிகா. தமிழில் 'மாப்பிள்ளை' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து, தன்னுடைய சினிமா கேரியரை ஸ்டார்ட் செய்தார்.

முதல் படத்திலேயே, இவரது பப்லியான அழகும் துறுதுறு பார்வையும் கியூட் சிரிப்பும் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்தது. எனவே அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி இடத்தை பிடித்தார்.


பப்லி ஹீரோயின் என சில விமர்சனங்களுக்கு ஆளான ஹன்சிகா, அந்த பெயரை மாற்றுவதற்காக, கடின உடற்பயிற்சி மற்றும் டயட் செய்து, தன்னுடைய உடல் எடையை மளமளவென குறைத்தார்.அந்த வகையில் தற்போது படு ஸ்லிம்மாக மாறி காட்சியளிக்கிறார் . எனினும் அவர் குண்டாக இருந்தபோது இருந்த அழகை, தற்போது மிஸ் செய்வதாக பல ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர். 

 கடந்த ஆண்டு  தன்னுடைய நீண்டநாள் நண்பரான சோஹைல் கத்தூரியா என்பவை காதலிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த முண்டோட அரண்மனையில் கரம் பிடித்தார்.இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.

ஹன்சிகா தன்னுடைய திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திற்கும் வழங்கி இருந்தார். இதில் தன்னை பற்றி பரவிய பல்வேறு வதந்திகள், காதல் சர்ச்சைகள் பற்றி பல்வேறு விஷயங்களுக்கு ஹன்சிகா விளக்கம் கொடுத்திருந்தார். இந்த வீடியோவில் ஹன்சிகாவின் தாயார், ஹன்சிகா நடிகையாக அறிமுகமான புதிதில் ஹார்மோன் இன்ஜெக்ஷன் எடுத்து கொண்டதாக பரவிய வதந்தி குறித்து பேசி விளக்கம் கொடுத்திருந்தார்.


இதுகுறித்து பேசியிருந்த அவர்  ஹார்மோன் ஊசி போட்டிருந்தால், நான் டாட்டா டாடாவை விட பணக்காரராக இருந்திருப்பேன். இப்படி சொல்பவர்களுக்கு பொது அறிவு இல்லை என நினைக்கிறேன். என தெரிவித்திருந்தார். மேலும் பொதுவாகவே நாங்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் சீக்கிரமாகவே வளர்ந்து விடுவார்கள். அந்த ஜீன் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது ஹன்சிகா இந்த ஹார்மோன் ஊசி சர்ச்சை குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். இதுபற்றி ஹன்சிகா பேசுகையில், இன்று வரை என்னால் ஊசி போட்டுக்கொள்ள முடியாது. இவ்வளவு ஏன் டாட்டூஸ் கூட என்னால் போட முடியாது. காரணம் ஊசி என்றால் எனக்கு அவ்வளவு பயம்.  ஒரு தாய் ஏன் இப்படிப்பட்ட  விஷயங்களை செய்ய வேண்டும் ?இது போன்ற விஷயங்களை பரப்புவதால் மக்கள் எங்களை பார்த்து பொறாமைப்படுவதாகவே நினைக்கிறேன். என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement