• Apr 19 2024

என்னால அதை யாருக்காகவும் மாற்ற முடியாது.. சினிமாப் பிரபலத்திற்கே கெத்துக் காட்டிய அஞ்சலி நாயர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்து வருவாரா அஞ்சலி நாயர். இவர் கேரளாவை சேர்ந்தவர். மேலும் இவர் தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான 'நெடுநல்வாடை' என்ற படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்தினைத் தொடர்ந்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'டாணாக்காரன்' என்ற படத்தில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படமானது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.


மேலும் இப்படத்தில் போலீஸாக நடித்திருந்த அஞ்சலி நாயருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதனால் செம்ம குஷியில் உள்ளார் அஞ்சலி நாயர். இது இவரின் திறமைக்கு கிடைத்த வெற்றி எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அஞ்சலி நாயர் நடிப்பில் 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற திரைப்படமானது கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதுமட்டுமல்லாது மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார் அஞ்சலி நாயர்.

அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றாராம்.


இந்நிலையில் இவர் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது இவரை சினிமாப் பிரபலம் ஒருவர் பெயரை மாற்றுமாறு கூறியிருந்தாராம். 

ஆனால் இவரோ பெற்றோர் இராணுவத்தில் இருந்ததால் சிறுவயதில் இருந்தே துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்ந்து விட்டார். இதனால் சினிமாவுக்காக தனது பெயரை மாற்ற முடியாது என பிரபலத்திடம் வெளிப்படையாக சொல்லிவிட்டாராம்.

குறிப்பாக தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது பெயரை மாற்றச் சொன்னதாகவும், ஆனால் சினிமாவுக்காக பெற்றோர் வைத்த அந்தப் பெயரை மாற்ற முடியாது எனவும் சொல்லி அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் அஞ்சலி நாயர். பார்த்தீங்களா எவ்வளவு துணிச்சலான பொன்னாக இருக்காங்க என்று

Advertisement

Advertisement

Advertisement