• Mar 29 2024

விஜய் சேர் இதை பண்ணுவார் என்று என்னால நம்பவே முடியலையே"- மேடையில் நடந்த சம்பவம் குறித்து நெகிழ்ந்த மானசி

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் இப்படத்தில் இவருடன் ராஷ்மிகா மந்தனா பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

மேலும் இந்த நிலையில் கடந்த 24ம் திகதி இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி , இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இந்நிகழ்வில், ரஞ்சிதமே பாடலை வாரிசு படத்தில் பாடியுள்ள பாடகி மானசி, மேடையில் நடிகர் தளபதி விஜய்யுடன் ரஞ்சிதமே பாடலை பாடிய அனுபவம் குறித்து பேச முற்பட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவரது மைக் திடீரென வேலை செய்யாமல் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

அந்த நொடியில் நடிகர் விஜய் உடனடியாக மேடையில் ஏறி வேறொரு மைக்கை அவர் கையில் கொடுத்துள்ளார். விஜய்யின் இந்த செயல், நிகழ்வு அரங்கத்தில் அனைவரையும் மனம் நெகிழ வைத்துள்ளது. மேலும்  ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பியதை அடுத்து, இந்த விஷயம் இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.


இந்த நிலையில், இசை நிகழ்ச்சியின் போது தனக்கு நடிகர் விஜய் உதவி செய்ததை எண்ணி பாடகி மானசி, நம்ப முடியாத வகையில் ரியாக்ட் செய்த விஷயம் அதிக கவனம் பெற்று வருகிறது. கார் ஒன்றிற்குள் இருக்கும் மானசி, "என்னால இத நம்பவே முடியலையே" என கூறியபடி சிரித்துக் கொண்டே இருக்கிறார். அங்கே இருக்கும் அவரது தோழி ஒருவர், எல்லாரும் ஃபோட்டோக்கு போஸ் தான் கொடுப்பாங்க, அவரு வந்து மைக்கையே கொடுத்தாரு பாரு" என்றும் கூறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement