• Apr 20 2024

திருமணத்தில் இணையவுள்ள இரு பிரபல நடிகைகள்... அதுவும் அடுத்த மாதமாம்.. நம்பவே முடியல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் உள்ள நடிகர், நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்களின் திருமணம் என்பது சில சமயங்களில் திடீரென நடைபெறும் ஒன்றாக இருந்து வருகின்றது.

அந்தவகையில் மலையாள நடிகையான அபர்ணா வினோத் மற்றும் இந்தி, தெலுங்கு மொழிகளில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வளம் வருகின்ற கியாரா அத்வானி ஆகிய இரு நடிகைகளுக்கும் அடுத்த மாதம் டிசம்பரில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இதில் விஜய்யின் 'பைரவா' படத்தில் நடித்தவர் தான் அபர்ணா வினோத். இப்படத்தில் கீர்த்தி சுரேஸுக்கு தோழியாக இவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது பரத்தின் 'நடுவன்' படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். 

இந்நிலையில் மலையாள நடிகையான அபர்ணா வினோத்துக்கும், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஏற்கெனவே முடிந்துள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் அபர்ணா வினோத்  மகிழ்ச்சியான பதிவொன்றின் மூலம் தெரிவித்து உள்ளார்.

அதாவது "உன்னை சந்தித்த நாள்தான் எல்லாவற்றுக்குமான தொடக்கம்" என்ற பதிவை பகிர்ந்துள்ளார். மேலும் தமிழிலும் ''உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா" என்றும் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அபர்ணா வினோத்துக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 


இதேபோன்று இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிகளவான படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கும் கியாரா அத்வானிக்கும் திருமணம் நடக்க உள்ளதாம். அதாவது கியாரா அத்வானியும், இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் கடந்த சில வருடங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள்.

இவர்களும் அடுத்த மாதம் டிசம்பரில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்விரண்டு ஜோடிகளுக்கும் ரசிகர்கள் இப்போதிருந்தே தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.


Advertisement

Advertisement

Advertisement