தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் முக்கிய நடிகர் தான் விஷால். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும திரைப்படங்கள் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதோடு சுமாரான வெற்றியையே பெறுகின்றன.
இருப்பினும் இவரது நடிப்பில் தற்பொழுது லத்தி என்னும் படத்தில் நடித்துள்ளார் .இப்படத்தில் கதாநாயகியாக சுஜைனா நடித்துள்ளார்.இப்படம் போலீஸ் கதை களத்தில் இயக்கப்பட்டிருக்கிறது.
அத்தோடு மார்க் ஆண்டனி படத்திலும் நடிக்கவிருக்கிறார். இது தவிர, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார் விஷால்.இந்நிலையில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் விஷால், ”அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன்.
அற்புதமான தரிசனம் / பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Listen News!