• Apr 23 2024

இது தான் எனது நிரந்தர வீடு என நம்புகிறேன்- உணர்ச்சி வசப்பட்டு பேசிய சன்னிலியோன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சன்னி லியோன். இவர் முதல் முறையாக தமிழில் ஓ மை கோஸ்ட் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தினை இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார்.இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் இவர் படங்களில் நடித்து வருவது மட்டுமல்லாது தனது சொந்த வாழ்க்கையிலும் பிஸியாக இருந்து வருகின்றார்.ஆனால் அவர் என்ன செய்தாலும் எல்லா நேரங்களிலும் மங்காமல் இருப்பது அவருடைய புன்னகை தான். அவர் இப்போது டேட்டிங் ரியாலிட்டி ஷோ-வான ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 14-ன் தொகுப்பாளராக மாறியுள்ளார். 


 மூன்று குழந்தைகளுக்கு தாயாக, குடும்ப விஷயங்களையும் பார்த்துக் கொண்டும் வருகின்றார். இந்த நிலையில் அவரது மகள் நிஷா மற்றும் இரட்டை மகன்கள் நோவா மற்றும் ஆஷர் ஆகியோர் சன்னி லியோனுடன் ஒரு பாடலுக்கு நடனமாட விரும்புகிறார்களாம்.

இந்நிலையில் சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில், கடந்த ஆண்டு நீங்கள் ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தீர்கள். உங்கள் மகிழ்ச்சியான இடத்தை இந்தியாவில் கண்டுபிடித்துவிட்டீர்களா அல்லது உங்கள் இதயம் இன்னும் அமெரிக்காவில் தான் இருக்கிறதா? என சன்னி லியோனிடம் கேள்வி கேட்கப்பட்டது. 


அதற்கு பதிலளித்த அவர், “எனது சகோதரர், அவரது மனைவி மற்றும் எனது அழகான மருமகள் மற்றும் எனது இரண்டு நண்பர்கள் என எனது இதயத்தின் ஒருபகுதி இன்னும் அமெரிக்காவில் தான் உள்ளது. பொருட்களைப் பொறுத்தவரை, முற்றிலும் இல்லை. என் நண்பர்களையும், குடும்பத்தினரையும் மிஸ் செய்கிறேன். அது தவிர, இது தான் என் வீடு. நான் இங்கு தான் இருக்க விரும்புகிறேன். இது தான் எனது நிரந்தர வீடு என நம்புகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement