• Apr 25 2024

நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை இப்போ அது நிறைவேறிட்டு- பிரபல நடிகரை புகழ்ந்த சாய் பல்லவி

stella / 10 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ஒன்றில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாம் தூம் படத்தில் ஒரு சில நொடிகள் நடித்து பின்னர் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் சாய்பல்லவி.

இப் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் ரசிக்க ஆரம்பித்தனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.


இதனால் தொடர்நது பட வாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன. இவர் நடித்த பல படங்கள் கலவையான விமர்சனங்கலை பெற்றாலும் சாய் பல்லவியின் நடிப்பு மட்டும் மெருகேறிக்கொண்டே சென்றது. அப்படி அவர் நடிப்பில் வெளியான முக்கியமான படம் கார்கி. குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தை சாய் பல்லவியின் நடிப்பு அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது. படத்தில் நடித்ததற்காக பலரும் தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை கெட்டியாக பிடித்து வைத்திருக்கிறார். இதன் காரணமாக  சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் . படத்தில் முக்கியமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், நிச்சயம் அவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில் நடிகை சாய் பல்லவி நிகழ்ச்சி ஒன்றில் அல்லு அர்ஜுனிடம் பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "அல்லு அர்ஜுன் சார் உங்கள் நடனத்தின் மிகப்பெரிய ரசிகை நான். அதுபற்றி உங்களுக்கு தெரியாது. நான் பள்ளி படிக்கும்போது உங்களது பாடல்களுக்கு நடனம் ஆடியது இன்னமும் நியாபகம் இருக்கிறது. இப்போது ஒரு கனவு போன்று இருக்கிறது. அது நனவாகியிருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement