• Apr 23 2024

என் முதல் மனைவிக்கு வருத்தம் தான்-உனக்கு ஏன் வயிறு எரிகிறது...பப்லுவின் நெத்தியடி பதில்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 57வயதான பப்லு 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என இணையத்தில் பப்லுக்கு எதிராக பலவிதமான கருத்துக்கள் தீயாய் பரவி வருகின்றது.

மேலும் இந்த விவகாரம் புயலை கிளப்பியதை அடுத்து நடிகர் பப்லு பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது காதலியுடன் பேட்டி கொடுத்துள்ளனர்.

அதாவது எங்களது உறவு முறை பற்றி பலரும், கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இந்த வயதிலும்,யாருக்கும் இப்படி ஒரு பெண்கிடைக்கமாட்டாள் எனக்கு கிடைத்து இருக்கிறது. இதுல உங்களுக்கு ஏன் வயிறு எறிகிறது என்றார்.

என் முதல் மனைவி பீனாவை காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டேன். அத்தோடு நானும் எனது மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டதால், எங்களால் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க முடியவில்லை. தினமும் சண்டை வந்ததால், நான் தனியாக வந்துவிட்டேன். 24 வயது பெண்ணை திருமணம் செய்வதால், பீனாவிற்கு நிச்சயம் வருத்தம் இருக்கும். இத்தனை ஆண்டுகள் விவாகரத்து வாங்காமல் இருந்தோம். ஆனால், 3 மாதத்திற்கு முன்பு விவாகரத்து  எமக்கு கிடைத்துவிட்டது.

6 வருடங்களாக மனைவியை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்தேன். அத்தோடு எனக்கு வீட்டில் அன்பு கிடைத்து இருந்தால் நான் வெளியில் போய் இருக்கமாட்டேன். மிகுந்த மன வேதனையில், தனிமையில் இருந்தேன் இந்த நேரத்தில் தான், இவளின் அறிமுகம் கிடைத்தது. எனக்கு நிறைய மரியாதை நிறைய காதல் மற்றும் சுகத்தை கொடுத்து இருக்கிறாள். என் முதல் மனைவி கொடுக்கவில்லை அவள் என்னை சரியாக  என்னை புரிந்து கொள்ளவில்லை.

எங்கள் இருவருக்கும் திருமணம் இன்னும் நடக்கவில்லை, இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம்.அத்தோடு  எங்கள் இருவரை பற்றி இவ்வளவு வைரலாக பேச காரணமே எங்கள் வயது தான். அத்தோடு 57 வயதில் திருமணமா? இந்த வயதில் பொம்பள சோக்கு கேக்குதா? பணம் இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவியா என கேட்கின்றனர். ஆமாம், நான் சம்பாதிக்கிறேன், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் உனக்கு ஏன் வயிறு எறிது என நச்சுனு பதில் கொடுத்தார்.

அத்தோடு எனக்கு பிறகு தனது மகனை இவள் நிச்சயம் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வயது என்பது ஒரு நம்பர் நான் இப்போதும் அழகாகவே இருக்கிறேன் என்றார். மேலும், வயதானவனை ஏன் காதலிக்கிறாய் என பலர் கேட்டனர். அத்தோடு  அதற்கு அவள் எனக்கும் வயது ஆகும், நான் இப்படியே இளமையாக இருக்க மாட்டேன், இன்றைய சந்தோஷம் தான் முக்கியம் என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement