• Apr 20 2024

உங்களை எல்லா இடங்களிலும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் - அம்மாவை நினைத்து உருகிய ஜான்விகபூர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

 1967ஆம் ஆண்டு வெளியான கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார் நடிகை ஸ்ரீதேவி.தனது 16 வயதில் மூன்று முடிச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

 தென்னிந்திய சினிமாவில் இருந்து சென்று பாலிவுட்டிலும் நடித்த நடிகை ஸ்ரீதேவி, 1996 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியானார்.போனி கபூக்கும் ஸ்ரீதேவிக்கும் ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.


 அடுத்தாக தெலுங்கிலும் ஜூனியர் என்டிஆரின் படத்தில் என்ட்ரி கொடுக்கவுள்ளார் ஜான்வி கபூர். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி திடீரென மரணமடைந்தார்.துபாயில் உறவினர் வீட்டின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.

 இந்நிலையில் ஸ்ரீதேவியின் நினைவு நாளை முன்னிட்டு ஜான்வி கபூர், தனது சமூக வலைத்தல்பப்பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்களும் கலங்கியுள்ளனர்.அதில், இன்னும் உங்களை எல்லா இடங்களிலும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் அம்மா. உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் நான் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அனைத்தும் உங்களிடம் தொடங்கி, உங்களிடமே முடிகிறது அம்மா" என குறிப்பிட்டு ஹார்ட்டின் ஈமோஜியையும் பதிவிட்டுள்ளார். 


மேலும் ஸ்ரீதேவியுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.ஜான்வி கபூரின் இந்த பதிவை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஹார்ட்டின்களை ஷேர் செய்து வருகின்றனர். இதேபோல் ரசிகர்களும் அவருக்கு ஆறுதலாக உங்கள் அம்மா எப்போதும் உங்களுடன்தான் இருப்பார், தொடர்ந்து அவர் பெருமைப்படும் வகையில் நடந்து கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர். நடிகை ஜான்வி கபூரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement