• Apr 24 2024

அந்த கதையை தான் தனுஷ் சாருக்கு சொல்ல போறேன்"- அடுத்த படம் குறித்து ஓபனாக பேசிய இயக்குநர் H.வினோத்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகிய  பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன்  புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் இவருடைய கெரியரில் முக்கியமானவையாக உள்ளது.அத்தோடு தேசிய விருதினையும் பெற்றிருக்கின்றார்.


அடுத்ததாக தனுஷ் நடிப்பில் கேட்பன் மில்லர், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.இதேபோல் சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குநர்  H.வினோத், சமூக குற்ற பின்னணிகள் தொடர்பான கதைகளை வலுவான திரைக்கதைகள் மூலம் படமாக்க கூடிய இயக்குநராக நம்பிக்கையை பெற்றவர். 

கார்த்தி நடிப்பில் தீரன், அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய  H.வினோத், அடுத்ததாக அஜித் நடிப்பில் துணிவு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.


இந்நிலையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை  H. வினோத் இயக்கவுள்ளதாக  தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. இப்படத்தை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோகஸ்த நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இச்சூழலில் பிரபல சேனலுக்கு வினோத் அளித்த பேட்டியில், "அஜித் சாருக்கு முதலில் கூறிய (நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன்பு) கதை துணிவு அல்ல. சதுரங்க வேட்டை படத்தின் பிரம்மாண்ட வடிவமான ஒரு கான் மேன் கதை தான் முதலில் கூறிய கதை. அந்த கதையை தான் தனுஷ் சாருக்கு சொல்ல போறேன்" என வினோத் பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement