சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கியவர் மகாலட்சுமி. 90’ஸ் கிட்ஸ் பலரின் கிரஷ்ஷாக வலம் வந்த இவர், பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவருக்கு அனில் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனை திருப்பதியில் வைத்து மணந்துக் கொண்டார் மகாலட்சுமி. இவர்கள் திருமணம் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து இருவரும் பல்வேறு சேனல்களிலும் பேட்டியளித்து வந்தனர்.
அத்தோடு சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருககும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது இருவரும் காருக்குள் இருந்து கொண்டு எங்க இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம் என பதிவிட்டுள்ளனர். இவர்களின் இந்த பதிவு வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!