• Apr 20 2024

காசுக்காக எப்படி வாய் கூசாமல் பொய் சொல்ல முடிகிறது- சிக்கன் பீஸ் சாப்பிட்டதால் மாட்டிக் கொண்ட ராஷ்மிகா மந்தனா

stella / 11 months ago

Advertisement

Listen News!

 கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா.தனது முதல் படத்திலேயே இவர் அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு கோவிந்தம்’ அறிமுகமாகி இருந்தார்.

 இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். பின் தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார்.


சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் வாரிசு என்ற படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார். இதனை அடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக படம் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ராஷ்மிகா நடித்த விளம்பரம் குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ராஸ்மிகா நடித்த அகோடா என்ற விளம்பரம் ரசிகர்கள் நடித்த நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதன் பின் மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் பிரைட் சிக்கன் பர்க்கரை அறிமுகம் செய்திருந்தது. இதனை விளம்பரம் படுத்தும் வகையில் நடிகை ராஷ்மிகாவை அணுகி இருந்தார்கள். ராஸ்மிகாவும் இந்த விளம்பரம் தொடர்பாக நடித்திருக்கிறார்.

தற்போது இந்த விளம்பர சர்ச்சையில் தான் ராஸ்மிகா சிக்கி இருக்கிறார். ஏன் என்றால், ராஷ்மிகா அளித்த பேட்டிகளில் நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன் என்று கூறியிருந்தார். உணவு தற்போது மெக் டொனால்ட்ஸ் நிறுவனம் வழங்கிய பிரைடு சிக்கன் பர்கர் விளம்பரத்தில் எப்படிநடித்தார் ? ஏன் இப்படி இரட்டை வேஷம் போடுகிறார் ? காசுக்காக ராஸ்மிகா இப்படியெல்லாம் மாறிவிட்டாரா? காசுக்காக இப்படி வாய்க்கூசாமல் பொய் சொல்ல எப்படி முடிகிறது என்றெல்லாம் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement