• Mar 29 2024

என்னது 'லவ் டுடே' படத்தில விஜய்யும், சிம்புவும் சம்மந்தப்பட்டிருக்காங்களா... எப்படித் தெரியுமா...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்து பலரது பாராட்டுக்களை பெற்று வருவது மாத்திரமல்லாமல், மாபெரும் வசூல் சாதனையையும் புரிந்து கொண்டிருக்கும் திரைப்படம் 'லவ் டுடே'.

தமிழ் சினிமாவின் புது இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். மேலும் இவரோடு இணைந்து சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தா


இப்படம் தொடர்பாக பல சுவாரஸ்யமான விடயங்களை சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கின்றார் பிரதீப் ரங்கநாதன். அதாவது "இந்தக் காலத்து காதலர்களை இந்தப்படம் பிரதிபலிப்பதால் லவ் டுடே என்ற தலைப்பு என் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அது மட்டுமின்றி ஒரு ட்ரஸ் எடுத்து தைத்து போடுவதை விட ரெடிமேட் உடை எடுத்து போட்டால் அதற்குத் தேவைப்படுகின்ற முயற்சி குறைவு" எனக் கூறியிருந்தார்.


மேலும் "நான் புதுமுகமாக அறிமுகமாவதால் குறைவான நேரத்தில் எனக்கு விளம்பரம் தேவைப்பட்டது, லவ் டுடே என்கிற தலைப்பு அதுவே அதனை விளம்பரம் செய்து கொண்டது. இதற்காக நான் முறையாக அந்தப் படம் சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து அனுமதி பெற்றிருக்கின்றேன்.

அதுமட்டுமல்லாது விஜய் சாரிடமும் அனுமதி வாங்கினோம். ஏற்கனவே பிகில் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்ததால் அவரிடம் என்னால் எளிதாக கேட்க முடிந்தது" எனவும் தெரிவித்திருந்தார். 


அத்தோடு "லவ் டுடே படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு நடிகர் சிம்புவும் உடனே எனக்கு ஃபோன் கால் செய்து பாராட்டினார். இதிலுள்ள விசயம் என்னவென்றால், என்னுடைய படத்திற்கு விளம்பர வடிவமைப்பு எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு நான் உதாரணமாக எடுத்துக் கொண்டதே அவருடைய வல்லவன் திரைப்படத்தை தான்.


அதாவது பப்ளிசிட்டி டிசைன் என்பது ஒரு படத்தை பப்ளிசிட்டி செய்ய வேண்டும். அந்த வகையில் வல்லவன் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வைரலானது. என்னுடைய குழுவினரிடமும் நான் அப்படிப்பட்ட பப்ளிசிட்டியை உண்டாக்க வேண்டும் என்றுதான் அடிக்கடி கூறுவேன். அப்படி இருக்கும்போது அவரே எனக்கு ஃபோன் கால் செய்து பேசியது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது" எனவும் பிரதீப் ரங்கநாதன் மனம் திறந்து கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement