• Apr 19 2024

3வது வாரத்திலும் பல்வேறு திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகள்-முதலில் இருப்பது துணிவா? வாரிசா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய திரைப்படங்கள் தான் வாரிசு மற்றும் துணிவு.அஜித்தின் துணிவு வங்கி கொள்ளை பற்றிய விஷயங்களை காட்டியுள்ளது, விஜய்யின் வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

துணிவு படத்தை போல நிஜத்தில் ஒரு கும்பல் திருட முயற்சி செய்ய போலுசார் கைது செய்யப்பட்டனர்.இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது, அதேபோல் அஜித்தின் ரசிகர் ஒருவர் ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது கீழே விழுந்து உயிரிழந்தார்.


ஆனால் விஜய்யின் வாரிசு படத்தால் இதுபோன்ற எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை.கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான இந்த இரண்டு படங்களும் 3 வாரங்களை கடந்துவிட்டது. 3 வார முடிவில் அஜித்தின் துணிவு ரூ. 230 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 280 கோடியும் வசூலித்துள்ளது.


வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் நல்லபடியாக செல்லும் என்கின்றனர்.இதனால் அஜித் மற்றும் விஜய்யின் நண்பர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement