• Apr 26 2024

டேய் கார்த்திக் நீ ஆண்கள் இனத்துக்கு அசிங்கம் டா - சுந்தரியை கொலை செய்ய கார்த்திக் போட்ட புதுத்திட்டம்- இனி நடக்கப் போவது என்ன?

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


மேலும் சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்று சொன்ன விஷயம் பொய் என்று அனு கண்டு பிடித்து அதனை சுந்தரியிடம் சொல்வி விட்டார். இதனால் சுந்தரியும் கார்த்திக்கும் அடிக்கடி வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படியான நிலையில் அனுவின் நண்பனான சிவா எப்படியாவது கார்த்திக்கின் உண்மை முகத்தை அனுவுக்கு தெரியப்படுத்த புதிய திட்டம் போடுகின்றார். ஆனால் கார்த்திக் சுந்தரிக்கு தெரியாமல் பாலில் ஏதோ கலந்து விட சுந்தரியும் அந்தப் பாலைக் குடித்து விடுகின்றார்.இதனால் சுந்தரிக்கு என்ன ஆகப்போகின்றது என்று தெரியவில்லை. இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement