• Apr 25 2024

"அவர் என் கணவர் இல்லை.. தயவு செய்து நிறுத்துங்கள்"... பீட்டர் பால் விஷயத்தில் பொறுமையிழந்து வனிதா வைத்த திடீர் வேண்டுகோள்...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

திரைப்படங்களின் மூலம் பிரபலமான நடிகை வனிதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மென்மேலும் பிரபலமானார். வாழ்க்கையில் பலமுறை தோல்வி கண்ட இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். 

ஆனால் அவர் குடி போதைக்கு அடிமையானவர் என்ற காரணத்தினால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை அந்த ஆண்டே பிரிந்தார். இந்த நிலையில் குடிபோதை காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பீட்டர் பால் சமீபத்தில் உயிரிழந்தார்.


இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வனிதாவின் கணவர் இறந்து விட்டதாக செய்திகளைப் பரப்பி வருகின்றன. இந்நிலையில் தற்போது வனிதா அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கும் முகமாக தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலமாக ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கின்றார்.


அந்தப் பதிவில் அவர் "சரி நிறைய பொறுமைக்குப் பிறகு நான் இதைக் கூறுகின்றேன். ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தி சேனல்களுக்கு நினைவூட்டுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. எல்லா மரியாதையுடனும் நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை, நாங்கள் 2020 இல் ஒரு குறுகிய உறவில் இருந்தோம், அது அதே ஆண்டு முடிந்தது.     

நான் அவருடைய மனைவி அல்ல , அவர் என் கணவர் அல்ல . என் கணவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை பரப்புவதை நிறுத்துங்கள். நான் சட்டரீதியாக தனியாக இருக்கிறேன், கணவர் இல்லை, துக்கமும் இழப்பும் இல்லை. நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன். இது உங்கள் அனைவருக்குமான ஒரு தாழ்மையான அன்பான வேண்டுகோள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement

Advertisement