• Apr 17 2024

3முறை திருமணம் செய்து கொண்ட ஜெயம் ரவியின் தந்தை... அவர் வாயாலேயே வெளிவந்த உண்மை இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துப் படங்களுமே வெற்றிப் படங்கள் தான் என்று கூறுமளவிற்கு சிறப்பாக நடிக்க கூடிய திறமை இவருக்கு உண்டு. 

அந்தவகையில் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி கோலிவுட்டில் சக்கை போடு போட்ட 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம்ரவி நடித்து அசத்தியிருந்தார். அப்படத்தின் உடைய வெற்றியைத் தொடர்ந்து 'இறைவன், சைரன், அகிலன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். 


ஜெயம் ரவியைப் போலவே அவரின் தந்தை மோகனும் சினிமாவில் பிரபலமான ஒருவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதாவது இவரும் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வந்தவர். 

இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் தான் மோகன் - வரலட்சுமி தம்பதியின் ஐம்பதாவது திருமண நாளை அவரது மகன்களான ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா இருவரும் இணைந்து கோலாகலமாக கொண்டாடினர். அது குறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன.


இந்நிலையில் ஜெயம் ரவியின் தந்தை மோகன் தனது மனைவியான வரலட்சுமியுடன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி ஒன்றினையும் கொடுத்துள்ளனர். அந்த பேட்டியில் தங்களது காதல் கதை, மற்றும் திருமணம் குறித்து மிகவும் உருக்கமாக மனம் திறந்து பேசியிருக்கின்றார் மோகன்.

அதாவது "தான் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றும், அவரது மனைவி ஒரு பிராமண வீட்டு பெண்" என்றும் கூறினார். அதுமட்டுமல்லாது தனது உண்மையான பெயர் ஜின்னா என்றும் அந்த பேட்டியில் மோகன் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.


மேலும் தங்கவேல் வீட்டில் தான் அவர் சிறுவயதில் வளர்ந்ததாகவும், தங்கவேலுக்கு குழந்தைகள் இல்லாததன் காரணமாக அவர் தன்னை குழந்தையாக தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும் மோகன் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தான் தனக்கு மோகன் என்ற இந்தப் பெயரை வைத்ததாக கூறிய அவர், தங்கவேல் மூலம் தான் சினிமாவில் எடிட்டிங் தன்னால் கற்றுக் கொள்ள முடிந்ததாக கூறி உள்ளார்.

அந்த சமயத்தில் தான் தனக்கும் தனது மனைவி வரலட்சுமிக்கு மூன்று முறை திருமணம் நடைபெற்ற சுவாரஸ்யமான தகவலையும் தெரிவித்துள்ளார் மோகன்.


அத்தோடு "நாங்கள் மதம் விட்டு மதம் கல்யாணம் செய்துகொண்டதாக சொல்கிறார்கள் ஆனால் உண்மையில் நாங்கள் மனம்விட்டு தான் கல்யாணம் செய்துகொண்டோம்" என்று இன்றளவும் குறையாத காதலுடன் மோகன் மற்றும் வரலட்சுமி ஜோடியினர் செம கியூட்டாக கூறி உள்ளனர். இவர்களின் இந்தப் பேட்டியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement