• Apr 25 2024

ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய... தமிழ் சினிமாப் பிரபலங்களின் லிஸ்ட் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் படங்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர், நடிகைகள் இடையே நிஜ வாழ்க்கையில் காதல் ஏற்பட்டு அவர்கள் திருமணம் செய்து கொள்வது வழமையான ஒன்று. இவ்வாறான நிகழ்வு தமிழ் சினிமாவிலும் ஏராளமாக நடந்துள்ளது. 

அந்தவகையில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக இணைந்தவர்கள் என்ற வரிசையில்  தற்போது புதிதாக கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் இருவரும் இணைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 'தேவராட்டம்' படத்தினல் ஜோடியாக இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது அப்பட ஷூட்டிங்கின் போது மஞ்சிமா மீது உண்மையான காதல் ஏற்பட்டு முதலில் மனம்திறந்து காதலை சொல்லி உள்ளார் கவுதம் கார்த்திக்.


ஆனால் அவர் காதலை சொல்லியும் இரு நாட்களுக்கு பின்னர் தான் கவுதமின் காதலை ஏற்றுக்கொண்டாராம் மஞ்சிமா. மேலும் சுமார் 3 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

அடுத்தகாக கோலிவுட்டில் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் ஜோடிகள் என்றால் நம்மில் பலருக்கும் முதலில் நினைவில் வருவது அஜித் - ஷாலினி ஜோடி தான். அந்தவகையில் 'அமர்க்களம்' என்ற படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருகுள்ளும் காதல் மலர்ந்தது.

பின்னர் 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஜோடியின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த ஜோடிக்கு தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


இவர்களைப் போலவே நடிகை ராதிகாவும், தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டாரான சரத்குமாரும் 'நம்ம அண்ணாச்சி' மற்றும் 'சூரியவம்சம்' ஆகிய படங்களில் இணைந்து ரீல் ஜோடியாக நடித்திருந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு தற்போது ராகுல் என்கிற மகன் உள்ளார்.


அஜித்- ஷாலினியைப் போலவே மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கோலிவுட் ஜோடிகளுள் சூர்யா - ஜோதிகாவும் அடங்குவர். அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக 7 படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா. அதிலும் குறிப்பாக கவுதம் மேனன் இயக்கிய 'காக்க காக்க' என்ற படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

இந்த ஜோடி கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மண வாழ்க்கையில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளார்.


மேலும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துகொண்டார்.

அதாவது 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற படத்தில் நடித்தபோது சினேகா - பிரசன்னா இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இந்த ஜோடிக்கும் தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.


இவர்களை போலவே நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் 'கஜினிகாந்த், டெடி' போன்ற படங்களில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர்.

அந்தவகையில் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்தது. இந்த ஜோடிக்கு அரியானா என்கிற அழகிய பெண் குழந்தையும் உள்ளது.


இவ்வாறாக தமிழ் சினிமாவில் பல ரீல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு ரியல் வாழ்க்கையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement