• Apr 18 2024

நிஜ புலியுடன் அமர்ந்து பேசும் 'நீயாநானா' கோபிநாத்... என்ன மனுசனய்யா... வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியாக 15 ஆண்டுகளை கடந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது 'நீயா நானா'. ஒரே சேனலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஆங்கரை வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.


இவ்வாறான ஒரு விவாத நிகழ்ச்சி இந்த அளவிற்கு ரசிகர்களை கவருமா என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளர் கோபிநாத். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவரே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 

கோபிநாத் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் Mr. and Mrs, சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும் பணிபுரிந்து வருகிறார்.


இந்நிலையில் கோபிநாத் சமீபத்தில் நிஜ புலியுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் "எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் மரியாதை" எனக் கூறுகின்றார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement