• Apr 23 2024

கதிரவனுக்கே வெய்யிலா... ஆயிஷாவின் வாயை அடைத்த கதிரவன்.. வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு சென்று கொண்டு இருக்கின்றது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

அந்தவகையில் கோபம், பொய், புரளி, அழுகை, சிரிப்பு என ரசிகர்களின் உணர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்ற வண்ணம் தான் இருக்கின்றன. சில நேரத்தில் பார்த்தால் ஒற்றுமையாக இருந்து பேசிக் கொள்வார்களா, ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உடனே சண்டை இடத் தொடங்கி விடுவார்கள்.


இந்நிலையில் இன்றைய வாரம் ஆனது ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் பிக்பாஸினால் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் பிக்பாஸ் வீடு றோயல் மியூசியமாகவும் மாறி இருக்கின்றது. இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேடத்தை ஏற்று நடித்த வண்ணம் இருக்கின்றார்கள்.

அந்தவகையில் தற்போது ஒரு வீடியோ ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது கதிரவன் அங்கிருந்த பொருளைத் திருடியமைக்காக ஆயிஷாவின் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.

அப்போது அங்கிருந்த தலையணையை தனது முழங்கையிற்கு கீழே எடுத்து வைக்கின்றார். அதற்கு ஆயிஷா அவரை முறைத்துப் பார்த்து "மேலும் ஏதாவது வேணுமா, அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்கு உங்களுக்கு பிலோ வேணுமா" என்று கேட்கின்றார். 


அதற்கு உடனே கதிரவன் "இது தலையணை" எனக் கூறிவிட்டு சொல்கின்றார் சிரிப்பு வந்துவிட்டது சந்தோசம்" என்கின்றார். அதற்கு உடனே ஆயிஷா "நல்லாய் வெய்யில் வரட்டும் உங்களை வெளியில் கொண்டு போய் கட்டி வைக்க சொல்கின்றேன்" என்கிறார். அதற்கு கதிரவன் "கதிரவனுக்கே வெய்யில்லா" என ஆயிஷாவின் வாயை அடைக்கும் படி கேட்க்கின்றார்.

 இதோ அந்தக் க்யூட் வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement