• Apr 20 2024

மஹா சிவராத்திரியில் பரவசமான நடிகர்கள்; இணையத்தில் வைரலாகிய புகைப்படங்கள் இதோ!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மஹா சிவராத்திரி தினமானது நேற்றைய தினம் உலகம் பூராகவும் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் மக்கள் சிவன் பெயரில் பூஜைகள், மந்திரங்கள் மற்றும் விரதம் என தூங்காது விழித்திருந்து தியானத்தில் ஈடுபட்டு சிவனை வழிபடுவது வழக்கம்.

இந்த மங்களகரமான நாளில், திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் ஆலயங்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

அந்த வகையில், மகா சிவராத்திரி தினத்தன்று சமந்தா, தனது சக நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக கோயம்புத்தூருக்கு சென்றிருக்கின்றார்.


அதேபோல் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, கோவையை அடுத்து பெங்களூருவில் அமைத்துள்ள 112 அடி உயர ஆதியோகி சிலைக்கும் சிறப்பு வழிபாடுகள் விடிய விடிய நடந்தது. இதில் எண்ணற்ற பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திடீர் என விசிட் அடித்துள்ளார்.


அதேபோன்று சிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 7 மணிக்கு தொடங்கும் சிறப்பு யாக கால பூஜைகள் விடிய விடிய அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது. இதற்காக 9 திரவியங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. இந்தப் பூஜை நிகழ்வில் கலந்து கொண்டு யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அதேபோன்று நடிகை தமன்னாவும் ஈஷா யோகா மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்று இருக்கின்றார். 


மேலும் நடிகை கங்கனா ரணாவத்தும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறார். 


அதேபோன்று நடிகர் அஜய் தேவ்கானும் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றார். இது குறித்த புகைப்படங்களை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். 


அதுமட்டுமல்லாது நடிகை மிர்னாளினியும் பிரபல கோவில் ஒன்றில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டிருக்கின்றார். 


இவ்வாறாக பல பிரபலங்களும் சிவராத்திரி தினத்தன்று ஆலயங்களிற்கு சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement