• Apr 25 2024

அவன் போகும் போது என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்- இறப்பு பற்றி அன்றே பேசிய மனோபாலா

stella / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அசத்தியவர் மனோபாலா. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வரும் ஹெச்.வினோத்தை இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் மனோபாலாதான். சதுரங்க வேட்டை போன்ற சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டை அதுவும் ஒரு புதுமுக இயக்குநரை நம்பி பணம் போடும் தைரியம் மனோபாலாவுக்கு இருந்ததை பார்த்து ஒட்டுமொத்த கோலிவுட்டே ஆச்சரியப்பட்டது.

தற்போதைய காலம் யூட்யூப் காலம் ஆகிவிட்டதை உணர்ந்துகொண்ட மனோபாலா வேஸ்ட் பேப்பர் என்ற யூட்யூப் சேனலை தொடங்கி சினிமா பிரபலங்களை பேட்டி எடுப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். அதுமட்டுமின்றி தனது அனுபவங்களையும் சுவாரஸ்யம் குறையாமல் தனக்கே உரிய பாணியில் பகிர்ந்துகொள்வதும் ரசிக்கும்படி இருக்கும்.


இப்படி பல துறைகளில் ஆளுமையாக இருந்த மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் மனோபாலா நடிகர் விவேக் இறந்த போது அளித்த பேட்டி தற்பொழுது வைரலாகி வருகின்றது.

இப்படி பல துறைகளில் ஆளுமையாக இருந்த மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் மனோபாலா நடிகர் விவேக் இறந்த போது அளித்த பேட்டி தற்பொழுது வைரலாகி  வருகின்றது.


அவர் கூறியதாவது நானும் விவேக்கும் ஒன்றாத் தான் ஊசி போடப் போனோம். அப்போ ஒரு ஊசியே ஊசி போட வருது எனக் கிண்டலடித்தார். அது எல்லாம் இப்பவும் என் காதில கேட்டுட்டே இருக்கு. ஊசி போட்டுட்டு வந்த மறுநாள் அவன் இல்லை என்று நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கு. இவன் போகும் போது என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம். விவேக் வீட்டில அவன் பைபயனை கிடத்தியிருந்த மாதிரியே அவனையும் கிடத்தியிருந்தாங்க. அது எல்லாம் என்னால பாக்கவே முடில என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement