வெங்கட் குமார் கங்கை அமரன் என்பவர் வெங்கட் பிரபு என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர்மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். மேலும் இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் ஆவார்.
மேலும் இவர் ஆரம்ப காலத்தில் கதாபாத்திர வேடங்களில் தோன்றி நடித்தார். மேலும் இவர் கோவா, மங்கத்தா , பிரியாணி, மற்றும் மாஸ் மசிலாமணி, போன்ற படங்கள் இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் ஆனார். அதை தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு படம் இயக்கினார் அப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது நாகைசைதன்யா நடிக்கும் என்சி 22 படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. மேலும் இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அது என்னவென்றால் வெங்கட் பிரபு மிருதங்கம் வசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை நிதின் சத்யா தீபாவளி ஸ்பெஷல் ஆக "மறைந்திருக்கும் திறமை" என கூறி பகிர்ந்துள்ளார்.
Listen News!