• Apr 18 2024

அவருக்கு தெய்வீகக் குரல்- இந்தப் பாட்டு அப்பாக்களுக்கு சமர்ப்பணம்-பிரபல பாடகரை புகழ்ந்த தனுஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முறையே முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.

மேலும் கதாநாயகிகளாக ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் எனலாம்.


 தேன்மொழி, மயக்கமா குழப்பமா, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, தாய்க்கிழவி ஆகிய பாடல்கள் படத்தில் அமைந்தன. இதில் மகன் - தந்தையை மையமாகக் கொண்ட கண்ணீர் சிந்த எனும் பாடலை விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் தனுஷ் தற்போது உருக்கமாக பேசியுள்ளார்.


இது தொடர்பான தமது டுவிட்டரில்ல், “கண்ணீர் சிந்த பாடல் - அப்பாக்களுக்கு சமர்ப்பணம்.. இந்த பாடலையும் இந்த காட்சியையும் விஜய் ஜேசுதாஸ் தம் தெய்வீக குரலால் அழகாக கொண்டு வந்திருக்கிறார். நன்றி.” என்று தனுஷ் குறிப்பிட்டிள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement