• Apr 20 2024

மறைந்த நடிகர் மயில்சாமியின் குடும்பத்தை பார்த்திருக்கின்றீர்களா?- மகன்கள் இருவரும் ஹீரோவாக நடிக்கிறார்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாது சிறந்த சமூக சேவகராகவும் விளங்கி வந்தவர் மயில்சாமி.மாரடைப்பு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்தார். முன்னதாக மயில்சாமிக்கு இரண்டுமுறை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இன்றைய தினம் அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


நேற்றைய தினம் மகா சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். உடன் டிரம்ஸ் சிவமணியும் இருந்துள்ளார். இதையடுத்து அதிகாலை 3.30 மணிக்கு வீடு திரும்பிய மயில்சாமி, பசிப்பதாக கூறி 4 மணியளவில் இட்லி சாப்பிட்டுள்ளார்.


இதையடுத்தே நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் அவரை அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு வரப்பட்டுள்ளது.


இதையடுத்து அவரது உடலுக்கு திரையுலகத்தினர் தொடர்ந்து நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மயில்சாமிக்குநடிகர் மயில்சாமிக்கு கீதா என்கிற மனைவியும், யுவன் மற்றும் அன்பு என்கிற மகனும் உள்ளனர்.மூத்த மகன் அன்பு, சினிமாவிலும் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.


 இவர் நடித்த அல்டி என்கிற திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதன்பின் அவர் நடிப்பில் பெரிய அளவில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இளைய மகன் பெயர் யுவன். இவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது தண்டகாரண்யம் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இப்போது இரண்டு மகன்களினதும் புகைப்படங்கள் வெளியாகி ரசிக்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement