• Apr 19 2024

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பிறந்த வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- இவ்வளவு வறுமையில் இருந்தாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் 80களில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடனம் ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

இவர் குடும்ப வறுமையால் சினிமா நடிகர்களுக்கு பணிப்பெண்ணாக இருந்தவர் வினு சக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமாகி பின் பலமொழி சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஜோடியானார். இவரது மயக்கும் கண்ணுக்கே தனி ரசிகர் பட்டாளமும் காணப்பட்டது.


இப்படி ஒட்டுமொத்த ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்த சில்க் ஸ்மிதா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் செப்டம்பர் 23ம் தேதி 1996ம் ஆண்டு சென்னையில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பிற்கு அவரது காதலன் தான் காரணம் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும் இன்னும் சரியான காரணம் வெளியாகாமல் மர்மமாகவே இருக்கின்றது. இவரை பற்றிய சுவாரஸியமான விடயங்களை இவரது சக நடிகைகள் பல்வேறு இடங்களிலும் கூறி வருவதைக் காணலாம்.

மேலும் சில்க் ஸ்மிதா மிகவும் கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவில் தான் இவரது பிறந்து வளர்ந்த வீடு உள்ளது. அந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருவருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement