• Apr 19 2024

ரேவதி சோதனைக் குழாய் மூலம் பெற்ற குழந்தையைப் பார்த்திருக்கின்றீர்களா?- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் தனது இயல்பான நடிப்பினாலும் அழகினாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் தான் ரேவதி.எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் அப்படியே அந்த கதாபாத்திரமாக மாறி அசத்தலாக நடிக்கக் கூடியவர் எனலாம்.

இவர் மண் வாசனை என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து கன்னி ராசி, ஆண்பாவம், மௌன ராகம், அரங்கேற்ற வேளை, ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 


தற்பொழுதும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.மேலும் நடிப்பதைத் தாண்டி இயக்குநராகவும் இருந்த வருகின்றார்.


இயக்குநர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு இடையில் நடிகை ரேவதி சோதனைக் குழாய் மூலம் கர்ப்பமாகி ஒரு பெண் குழந்தையை பெற்றார், அவருக்கு மஹி என்றும் பெயர் வைத்துள்ளார்.


அவர் தான் தனது உலகம், ஒரு அம்மாவாக அவளை நன்றாக கவனித்து வருகிறேன் என ஒரு பேட்டியில் கூட கூறியுள்ளார்.அவரின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement