• Apr 20 2024

இயக்குநர் மணிரத்னத்தின் மாமியாரைப் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சுஹாசினி தனது அம்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதைக் காணலாம்.

தமிழ் சினிமாவில் 80களில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சுஹாசினி.உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.


மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாயகியாக நடித்து இருக்கின்றார். மேலும் இவர் இவர் நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இருந்திருக்கின்றார்.

 இவர் 1988ம் ஆண்டு இயக்குநர் மணிரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில்  நடிகை சுஹாசினி தனது தாயாருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.


மேலும்  சுஹாசினியின் கணவர் மணிரத்னம் தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.இப்படம் செப்டெம்பர் 30ம் திகதி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement