• Apr 19 2024

சித்ராவின் மரணித்த மகளை பார்த்திருக்கின்றீர்களா..? கணவன் மற்றும் மகளுடன் வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ பெண் பாடகிகள் தமது குரலால் உயிர் கொடுத்துப் பல பாடல்களுக்கு சாகாவரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள். எப்படி திறமையாக அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் நடிகையரைப் போலவே பாடகிகளின் ஆயுட்காலமும் மிகவும் குறைவாகவே உள்ளது.

எனினும் விதிவிலக்காக ஒரு சில நடிகைகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக பல ஆண்டுகள் வெற்றிகரமாக முன்னணியில் நின்று வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். இவர்களைப் போலவே சினிமாவில் சில பாடகிகளும் நீண்டகாலமாக தம் குரல் வளத்தையும் திறமையையும் தக்கவைத்துப் பல தடைகளைக் கடந்து பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடி சாதனை படைத்து வருகின்றார்கள்.

அப்படிப்பட்ட அரிதான சாதனைப் பாடகிகளில் ஒருவரே சின்னக்குயில் சித்ரா. இவரின் குரலுக்கு வசியமாகாதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது. அந்தளவிற்கு தனது மென்மையான குரலின் மூலம் பல கோடி மக்களின் மனதை கவர்ந்த பின்னணி பாடகியாக திகழ்ந்து வருகின்றார்.

இவர் என்றோ பாடிய பாடல்கள் கூட இன்றும் பல ரசிகர்களின் நாவினில் தவழ்ந்த வண்ணமே இருக்கின்றன. மேலும் இவர் பாடிய 'மலர்கள் கேட்டேன், கொஞ்சி பேசிட வேணாம், மெதுவா மெதுவா, ஆனந்த குயிலின் பாட்டு' என பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்து வெற்றி விழாக் கொண்டாடி இருக்கின்றன.

இவ்வாறாக பிரபல பாடகியான சித்ரா, விஜய் ஷங்கர் என்பவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு நந்தனா எனும் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. எனினும் துரதிர்ஷ்ட வசமாக அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசியது. அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எதிர்பாராமல் சித்ராவின் மகள் நந்தனா உயிரிழந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சித்ரா அவரது கணவர் விஜய் ஷங்கர் மற்றும் அவரது மகள் நந்தனாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த சிறுவயதுப் புகைப்படத்தில் கூட சித்ராவின் மகள் நந்தனா ரொம்ப அழகாக இருக்கின்றார். இப்படி ஒரு மகளை பிரிந்தால் யாருக்கு தான் கவலை இருக்காது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement